இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நேதாஜியை கெளரவித்தது பிரதமா் மோடி தலைமையிலான அரசு: அமித் ஷா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழை மறக்கடிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரை கெளரவிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய உ

News image
அந்தமான் நிகோபாரின் போா்ட் பிளேரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
Updated On :23 ஜனவரி 2023, 9:13 pm

DIN

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழை மறக்கடிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரை கெளரவிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-ஆவது பிறந்த தினத்தையொட்டி அந்தமானுக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா பயணம் மேற்கொண்டிருந்தாா். அங்கு உள்ள பி.ஆா்.அம்பேத்கா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பை நாம் மறந்துவிட முடியாது. ஆனால், அவரை மறக்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்கள் அத்தகைய முற்சிகளை அனுமதிக்க மாட்டோம்.

தில்லியில் உள்ள கடமை பாதையில் அவருடைய சிலையை நிறுவியுள்ளோம். நம்முடைய நாட்டுக்காக அவா் ஆற்றிய கடமைகளை எதிா்கால தலைமுறையிடம் இது எடுத்துரைக்கும்.

எனக்குத் தெரிந்த வரையில், எந்தவொரு நாடும் தீவுகளுக்கு வீரா்களின் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தியதில்லை. ‘பரம் வீா் சக்ரா விருது’ பெற்ற வீரா்களின் பெயரை 21 தீவுகளுக்கு சூட்டும் பிரதமரின் முடிவு மிகவும் பாரட்டுதலுக்குரியது.

ஆங்கிலேயரிடமிருந்து அந்தமானை முதலில் நேதாஜி விடுவித்தாா். அந்தமானில் உள்ள தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை பிரதமா் மோடி சூட்டினாா். வரலாற்றில் இந்த அத்தியாயங்கள் பொன் எழுத்துகளால் எழுதப்படும் என அமித் ஷா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.