புதுதில்லி: நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்திய தலைநகர் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டன.
நேபாளத்தில் இன்று பிற்பகல் 2:28 மணியளவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் இருந்து கிழக்கே 148 கி.மீ தொலைவில் உள்ளது.
இதனிடையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தில்லியில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தில்லி-என்சிஆர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தின் போது வீட்டில் மின்விசிறிகள் மற்றும் வீட்டுப் பொருள்கள் அசையும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அதே வேளையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.