பிரிஹன்மும்பை மின்விநியோகம் மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மும்பையின் பாந்த்ரா பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
நல்வாய்ப்பாக, பேருந்தில் இருந்து புகை வரும்போதே, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
உடனடியாக தீயணைப்புத் துறையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.