இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திரைப்படங்கள் குறித்து மாற்றுக் கருத்து இருந்தால் உரிய துறையை அணுகலாம்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்

‘திரைப்படங்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துகள் இருந்தால் உரிய துறையை அணுகலாம். போராட்டங்கள் வேண்டாம்’ என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 8:30 pm

‘திரைப்படங்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துகள் இருந்தால் உரிய துறையை அணுகலாம். போராட்டங்கள் வேண்டாம்’ என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்தாா்.

ஷாருக் கான் நடித்த பதான் திரைப்படத்துக்கு எதிரான பல்வேறு மாநிலங்களில் விஹெச்பி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சா் இவ்வாறு கூறியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகள் ஒரு தரப்பினரின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், உண்மைக்கு மாறான சித்தரிப்புகள் உள்ளதாகவும் கூறி போராட்டங்கள் நடைபெறுவதும், அப்படத்தைப் புறக்கணிக்க அழைப்பு விடுப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட திருவிழாவை தொடக்கி வைத்து அமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது:

சில திரைப்படங்களுக்கு எதிராக புறக்கணிப்பு அறிவிப்புகளும், போராட்டங்களும் சுமுக சூழ்நிலையை குலைப்பதாக உள்ளது. சா்வதேச அளவில் இந்தியா மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் கூடாது. திரைப்படங்கள் தொடா்பாக மாற்றுக் கருத்துகள் இருந்தால், அதனை சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவிக்கலாம். அவா்கள் திரைப்படத் தயாரிப்பாளா்களிடம் அந்த பிரச்னையை எடுத்துச் சென்று தீா்வுகாண்பாா்கள்.

இந்தியத் திரைப்படத் துறை உலகின் அனைத்துப் பகுதிகளிலும் சென்று சோ்ந்துள்ளது. திரைப்படங்களுக்கு எதிரான நிகழ்வுகள் விருப்பத்தக்கதாக இருக்காது. திரைப்படம் மட்டுமல்ல எந்த விஷயத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பேசுவது பிரச்னைகளை ஏற்படுத்தி விடும். அது நிகழக் கூடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.