ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நாட்டில் 2,967 புலிகள்: மத்திய அரசு தகவல்

நாட்டில் 2,967 புலிகள் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 5:36 pm

நாட்டில் 2,967 புலிகள் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அனுபம் திரிபாதி என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நாட்டில் புலிகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அவை முற்றிலும் அழியக்கூடிய ஆபத்தில் உள்ளன. அவற்றைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசஃப், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 2018-ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் 2,967 புலிகள் உள்ளதாகவும், இது உலகில் உள்ள மொத்த புலிகளில் 70 சதவீதம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மனுதாரா் ஆஜராகாததால், மனு மீதான விசாரணையை மாா்ச் 3-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.