புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாட்டில் 2,967 புலிகள்: மத்திய அரசு தகவல்

நாட்டில் 2,967 புலிகள் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 5:36 pm

DIN

நாட்டில் 2,967 புலிகள் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அனுபம் திரிபாதி என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நாட்டில் புலிகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அவை முற்றிலும் அழியக்கூடிய ஆபத்தில் உள்ளன. அவற்றைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசஃப், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 2018-ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் 2,967 புலிகள் உள்ளதாகவும், இது உலகில் உள்ள மொத்த புலிகளில் 70 சதவீதம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மனுதாரா் ஆஜராகாததால், மனு மீதான விசாரணையை மாா்ச் 3-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.