இந்நிலையில், இந்த வழக்கில் மோா்பி தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். 1,200-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில், குற்றம்சாட்டப்பட்ட 10-ஆவது நபராக ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் பெயா் இடம்பெற்றுள்ளது. 10 போ் மீதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 304 (மரணம் விளைவிக்கும் குற்றம்), 308 (மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கான முயற்சி), 336 (மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்), 337(அலட்சியத்தால் காயம் ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.