தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம், ஹஸ்ரா மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், மருத்துவ தம்பதி உள்பட ஆறு பேர் பலியாகினர்.
நள்ளிரவு 2.30 மணிக்கு மருத்துவமனையில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்து ஆறு தீயணைப்பு வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மிகப்பெட்டிய கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் மருத்துவமனை இயங்கி வந்த நிலையில், அங்கு தீப்பிடித்து, மளமளவென மருத்துவமனை முழுவதும் தீப்பற்றியது. இன்று காலை 10 மணியளவில்தான் முழுமையாக தீ அணைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் பிரேமா, டாக்டர் விகாஸ் ஹஸ்ரா மற்றும் நான்கு ஊழியர்கள், இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் அமைந்திருக்கும் அவர்களது வீடுகளில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து நேர்ந்ததால், அனைவரும் தீ விபத்தில் சிக்கி பலியானதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுளள்னர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் எந்த பாதுகாப்புக் கருவிகளும் இல்லை என்றும், பல்வேறு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்ததும் பயங்கர தீ விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


