எதிர்க்கட்சிகளின் கூட்டம் வேறு மாநிலத்திற்கு மாற்றம்?

பெங்களூருவில் நடக்கவிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டம் வேறு மாநிலத்திற்கு மாற்றம்?

பெங்களூருவில் நடக்கவிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்தில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்ற திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெங்களூருவில் ஜூலை 13-14 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா அல்லது ஜெய்ப்பூரில் இந்த கூட்டம் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிா்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் ஜூலை 12-ல் ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என்றும் இரண்டாவது கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கும் என்றும் அன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

பின்னர் இக்கூட்டம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. ஜூலை 13-14 தேதிகளில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com