
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்நாத் கோயிலில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ருத்ராபிஷேகம் மற்றும் யாகத்தில் பங்கேற்றார்.
வட இந்தியர்களின் புனித மாதமாக கருதப்படும் சாவன் மாதத்தின் முதல் நாளான இன்று கோரக்நாத் கோயிலில் பால் மற்றும் பழச்சாறு கொண்டு ருத்ராபிஷேகம் செய்தார்.
அவருடன், தலைமை அர்ச்சகர் ஆச்சாரியா ராமானுஜ திரிபாதி மற்றும் பிற ஆச்சாரியர்கள் மஹா மந்திரங்களை உச்சரித்து சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொண்டனர்.
பின்னர், வேத மந்திரங்கள் முழங்க முதல்வர் யோகி ஆத்யநாத் யாக பூஜை மற்றும் ஆர்த்தி பூஜையில் பங்கேற்று மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வளமாகவும் வாழ வாழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.