அமர்நாத் யாத்திரையில் தொடங்கி மூன்றாவது நாள்களில் 17 ஆயிரம் பேர் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.
காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை இந்தாண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி நிகழ உள்ளது. இந்நிலையில், மூன்றாவது நாளில் மட்டும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குகைக் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
4,975 ஆண்கள், 1,429 பெண்கள், 33 குழந்தைகள், 151 சாதுக்கள் மற்றும் சாத்விகள் 9 பேர் என 6,597 பேர் அடங்கிய மற்றொரு குழு பகவதி நகரிலிருந்து இன்று புறப்பட்டுச் சென்றது.
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.