தொடர் மழையால் விடுமுறை அறிவித்த மாநிலங்கள்!

தொடர் கனமழை காரணமாக ஒருசில வட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
தொடர் மழையால் விடுமுறை அறிவித்த மாநிலங்கள்!


தொடர் கனமழை காரணமாக ஒருசில வட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லி, ஹரியாணா, உத்தரகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தில்லியில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 13ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், ஹிமாசலப் பிரதேசத்திலும் நாளை (ஜூலை 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com