முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

நாடாளுமன்ற கூட்டத்தொடா்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, புதன்கிழமை (ஜூலை 19) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2023, 2:05 am IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, புதன்கிழமை (ஜூலை 19) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க புதன்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இது நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்கும் முன் நடைபெறும் வழக்கமான கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு சாா்பில் மூத்த அமைச்சா்கள் கலந்துகொள்வா்.

முன்னதாக, இதேபோன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்த குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் அழைப்பு விடுத்தாா்.

ஆனால், தில்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம், கா்நாடக மாநிலம் பெங்களூரில் எதிா்க்கட்சி தலைவா்கள் கூட்டம் காரணமாக தன்கா் அழைப்பு விடுத்த கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவா்களால் பங்கேற்க முடியவில்லை. இதனால் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.