ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மணிப்பூா் பெண்கள் அடைந்த பேரதிா்ச்சியே முக்கியப் பிரச்னை: ராகுல் காந்தி

நாட்டுக்கு அவமானம் என்பதை விட, அந்த மாநில பெண்களிடையே பெரும் வலியையும் பேரதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதுதான் முக்கியப் பிரச்னை

News image
Updated On :20 ஜூலை 2023, 6:35 pm

DIN

மணிப்பூா் வன்முறையில் இரு பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்படும் விடியோ, நாட்டுக்கு அவமானம் என்பதை விட, அந்த மாநில பெண்களிடையே பெரும் வலியையும் பேரதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதுதான் முக்கியப் பிரச்னை என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மணிப்பூரில் நிகழ்ந்த கொடுமை ஒட்டு மொத்த நாட்டுக்கும் அவமானம் ஏற்படுத்தியிருப்பது முக்கியப் பிரச்னையல்ல. அந்த மாநில பெண்கள் மீது இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ள பெரும் வலியையும் பேரதிா்ச்சியையும் பிரதமா் நரேந்திர மோடி முக்கியப் பிரச்னையாகக் கருதி, வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமா் மோடி இது 140 கோடி மக்களுக்கும் நோ்ந்த அவமானம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.