கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மணிப்பூர் தொடர்பாக பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டும்: நிதிஷ் குமார்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 ஜூலை 2023, 10:07 am

DIN

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாத தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன்பிறகு நீடித்து வரும் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இந்தச் சூழலில், காங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு பழங்குடியினப் பெண்கள், மற்றொரு தரப்பு ஆண்களால் ஆடைகள் களையப்பட்டு, ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ல் தொடங்கியது. இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியதும் மணிப்பூர் விடியோ தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 

பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் இதுவரை பதில் அளிக்காத நிலையில் நாடாளுமன்றம் ஐந்தாவது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. எதிர்க்கட்சியினர் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றினர். சபாநாயகர் இந்த தீர்மானத்தை ஏற்றுள்ளார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியது, 

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் குறித்து நிதீஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிப்பூரில் நடக்கும் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? மணிப்பூர் வன்முறை மற்றும் விடியோ தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.