ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆர்டிஐ-யின் கீழ் கேள்வி எழுப்பியவருக்கு 40,000 பக்கங்களில் பதில்!

மத்திய பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்பு காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பாக விவரங்களை தருமாறு

News image
Updated On :30 ஜூலை 2023, 3:37 am

DIN

மத்திய பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்பு காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பாக விவரங்களை தருமாறு தகவல் பெறும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய நபருக்கு, 40,000 பக்கங்களில் மாநில சுகாதாரத் துறை பதிலளித்திருப்பது தெரியவந்துள்ளது.
 இந்தூரைச் சேர்ந்த தர்மேந்திர சுக்லா என்ற அந்த நபர், தான் கோரி விவரங்கள் அடங்கிய 40,000 பக்கங்களை தனது கார் முழுவதும் நிரப்பி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். தனது அனுபவம் குறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது:
 மாநிலத்தில் கரோனா காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றிற்கான விலை ரசீதுகள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான விவரங்களை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில தலைமை மருத்துவம் மற்றும் சுகாதார அதிகாரியிடம் (சிஎம்ஹெச்ஓ) கேட்டிருந்தேன்.
 ஒரு மாதம் ஆகியும் பதிலளிக்காததைத் தொடர்ந்து, ஆர்டிஐ-க்கான முதல் மேல்முறையீட்டு அதிகாரியான சரத் குப்தாவிடம் மேல்முறையீடு செய்தேன். அதனை ஏற்றுக்கொண்ட குப்தா, சுக்லா கேட்ட விவரங்களை கட்டணம் ஏதுமின்றி வழங்குமாறு உத்தரவிட்டார்.
 அதனைத் தொடர்ந்து, எனது காரில் சிஎம்ஹெச்ஓ அலுவலகத்தை அணுகியபோது, ஆர்டிஐ-யில் கோரிய விவரங்கள் அடங்கிய 40,000 பக்கங்களை அளித்தனர். அவற்றை எனது கார் முழுவதும் - ஓட்டுநர் இருக்கை தவிர- நிரப்பி வீட்டுக்கு எடுத்துச் சென்றேன் என்றார்.
 மனுதாரர் கோரிய விவரங்கள் அடங்கிய பதிலுக்கு கட்டணமாக, பக்கம் ஒன்றுக்கு ரூ.2 வசூலிக்கப்படுவது வழக்கம். கோரப்பட்ட விவரங்களை ஒரு மாதத்துக்குள் அளிக்காவிட்டால் கட்டணமின்றி அதனை மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்பது விதிமுறை.
 இந்நிலையில், பக்கம் ஒன்றுக்கு ரூ.2 கட்டணம் என்ற வீதத்தில் ம.பி. அரசின் பதிலுக்கு அந்த மனுதாரர் ரூ.80,000 செலுத்தியிருக்க வேண்டும். உரிய காலம் கடந்து பதில் அளிக்கப்பட்டதால், ம.பி. அரசுக்கு ஏற்பட்டுள்ள ரூ.80,000 இழப்புக்கு யார் காரணம் என்ற அறிய துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.