ஒருநாள் பிணை: திகார் சிறையிலிருந்து வீட்டுக்கு வந்தார் மனீஷ் சிசோடியா!

மனீஷ் சிசோடியாவிற்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து மனீஷ் சிசோடியா தன் மனைவியைச் சந்திக்க தில்லி திகார் சிறையிலிருந்து தன் இல்லத்திற்கு வந்துள்ளார். 
ஒருநாள் பிணை: திகார் சிறையிலிருந்து வீட்டுக்கு வந்தார் மனீஷ் சிசோடியா!
Updated on
1 min read

மனீஷ் சிசோடியாவிற்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து மனீஷ் சிசோடியா தன் மனைவியைச் சந்திக்க தில்லி திகார் சிறையிலிருந்து தன் இல்லத்திற்கு வந்துள்ளார். 

மனீஷ் சிசோடியாவின் 49 வயதான மனைவி சீமா சிசோடியாவுக்கு ஆட்டோ இம்யூன் பிரச்னை உள்ள நிலையில், அவர் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள மனைவியை சந்திக்க மனீஷ் சிசோடியாவிற்கு தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

தன் மனைவியை சந்திக்க காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனீஷ் சிசோடியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மூத்த சிறை அதிகாரி ஒருவர் சிசோடியாவை காலை 9 மணியளவில் பாதுகாப்புப் படையுடன் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

சிசோடியா தன் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு எந்த நபர்களுடனும் தொடர்புகொள்ளக்கூடாது என்றும் தொலைபேசி, இணையத்தை அணுகக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com