அசாமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில்,
நிலநடுக்கமானது இன்று காலை 10.05-க்கு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்பூருக்கு மேற்கு 39 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம்
குவஹாட்தியின் சில பகுதிகளிலும், மாநிலத்தில் பிற நகரங்களிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்பு மற்றும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த மே 29-ம் தேதி ரிக்டர அளவில் 4.4 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.