ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அசாமில் கனமழை: 33,000 பேர் பாதிப்பு; 142 கிராமங்கள் நீரில் மூழ்கின!

அசாம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 33,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 142 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

News image
Updated On :19 ஜூன் 2023, 9:50 am

DIN

அசாம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 142 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் அங்கு பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

மேலும் தொடர்ந்து அடுத்த 5 நாள்களுக்கு கனமழை இருப்பதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் கோக்ராஜ்ஹர், சிராங், பக்ஸ்சா, பர்பேட்டா, போன்கைகான் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அசாமில் பெய்த கனமழையினால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் லக்கிம்பூர் பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 142 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.