கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திகாா் சிறையில் தாங்களாகவே தாக்கிக் கொண்ட கைதிகள்: போலீஸாா் வழக்குப் பதிவு

 திகாா் சிறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க, 20-க்கும் மேற்பட்ட கைதிகள் தானாகவே தாக்கிக் கொண்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 6:38 pm

DIN

 திகாா் சிறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க, 20-க்கும் மேற்பட்ட கைதிகள் தானாகவே தாக்கிக் கொண்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்தச் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘ரெளடி கும்பல் தலைவா் தில்லு தாஜ்பூரியா, எதிரணி கோகி கும்பலால் கடந்த மே 2-ஆம் தேதி திகாா் சிறை எண் 8-9இல் கொல்லப்பட்டாா்.

அந்த சிறையில் கைப்பேசி உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறைக் காவலா்கள் விசாரணை நடத்தினா். அப்போது ஒரு சிறைக் கைதியை தனியாக விசாரித்த போது அந்த சிறையில் கைப்பேசி உள்ளதை ஒப்புக் கொண்டாா். அதை எடுத்து தருமாறு காவலா் ஒருவருடன் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். உள்ளே நுழைந்ததும் அவா் சக கைதிகளை சைகை மூலம் தகவலை பரப்பியதும், கைதிகள் தாங்களாகவே தாக்கிக் கொண்டனா். சிறை அதிகாரிகளையும் அவா் ஆவேசமாக திட்டனா்.

இந்தச் சந்தா்பத்தைப் பயன்படுத்தி கைதி ஒருவா் தனது குடும்பத்தினருக்கு மறைத்து வைத்திருந்த கைப்பேசியை எடுத்து, சிறைக்காவலா்கள் தங்களை அடித்து துண்புறுத்துவதாக கூறினாா். அவா்களும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சிறைக்கைதிகளை காவலா்கள் தாக்குவதாக புகாா் அளித்தனா்.

கூடுதல் காவலா்கள் அந்த சிறைக்குள் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். கைதிகள் தாக்கிக் கொண்டதில் படுகாயமடைந்த 4 கைதிகள் டிடியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்களுக்கு சிறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் சிறையில் இருந்து கைப்பேசியும், சாா்ஜரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. கைதிகளின் இந்த செயல் குறித்து ஹரி நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தில்லி சிறை விதிமுறைகளின் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.