ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மணிப்பூரில் பதற்றம் நீடித்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது: காவல்துறை

வன்முறை வெடித்த மணிப்பூர் மாநிலத்தில், பதற்றமான சூழ்நிலை நீடித்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்பிலிருந்து..

Updated On :24 ஜூன் 2023, 2:16 pm

இம்பால்: வன்முறை வெடித்த மணிப்பூர் மாநிலத்தில், பதற்றமான சூழ்நிலை நீடித்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

ஓரிரு மாவட்டங்களில் ஆங்காங்கே வன்முறை தலைதூக்கினாலும், பெரும்பாலான மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே காவல்துறையினர் கூறுகிறார்கள்.

மாவட்ட பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, மாவட்டந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பதற்றமான பகுதிகளில் ரோந்து மற்றும் கொடியணிவகுப்பு, தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, இம்பாலில் இரண்டு பகுதிகளில் தேடுதல்வேட்டைகள் நடத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.