ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவது மாநிலத்தின் நற்பெயருக்கு ஏற்படுத்தும் கலங்கம் என பாஜக செய்தித் தொடர்பாளர் ராகுல் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ஆளுநர் தூங்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி நினைக்கிறார். மம்தாவுக்கும் அவரின் கட்சிக்கும் ஆளுநர் அஞ்ச வேண்டியதில்லை
மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி கூச் பெஹாரில் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜக நாட்டை விற்க நினைக்கிறது என விமர்சித்தார். மேலும், பஞ்சாயத்துத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடையும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ராகுல் சின்ஹா, மாநிலத்தின் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவது மாநிலத்தின் நற்பெயருக்கு நாமே கலங்கத்தை ஏற்படுத்துவது போன்றது எனக் குறிப்பிட்டார்.
மாநில ஆளுநர் தூங்க வேண்டும் என மம்தா நினைப்பதாக சுட்டிக்காட்டிய அவர், மம்தா பானர்ஜிக்கும் அவரின் கட்சி நிர்வாகிகளுக்கும் ஆளுநர் அஞ்ச வேண்டியதில்லை எனக் குறிப்பிட்டார்.