மகாராஷ்டிரத்தின் பந்தர்பூரில் உள்ள விட்டல் ருக்மணி கோயிலில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று வழிபாடு மேற்கொண்டார்.
ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு முதல்வர் சந்திரசேகர்ராவ் இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரத்துக்கு வந்துள்ளார்.
பாரத் ராஷ்டிர சமிதி தலைவரும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் திங்கள்கிழமை 600 வாகனங்களுடன் இருசக்கர வாகனத்தில் பந்தர்பூருக்கு வந்துள்ளதாக அக்கட்சியில் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.