பழங்குடியினர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை சேதப்படுத்திய காட்டு யானை!

பழங்குடியினர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை சேதப்படுத்திய காட்டு யானை!

பழங்குடியினர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை ஒற்றைக் காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது.
Published on

பழங்குடியினர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை ஒற்றைக் காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது.

கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மூலக்காடு  பழங்குடியினர் கிராமம் உள்ளது. இங்கு தனியார் தொண்டு அமைப்பு சார்பில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தை நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை முற்றிலுமாக சேதப்படுத்தி உள்ளது. 

இதில் மூங்கில் தட்டிகளால் ஆன அங்கன்வாடி மையம் முழுவதுமாக சேதமடைந்ததோடு, உள்ளே இருந்த பொருள்களும் சேதம் அடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com