யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நாகாலாந்து, திரிபுராவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக! மேகாலயாவில்?

நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2023, 4:49 pm

DIN

நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க பாஜக ஆதரவைக் கோரியுள்ளது. 

நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதன் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

நாகாலாந்து

நாகாலாந்து மாநிலத்தில் 60 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சி அமைக்க 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தேர்தல் ஆணைய தரவுகளின்படி பாஜக தற்போது 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) 25 தொகுதிகளில் வென்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 7, தேசிய மக்கள் கட்சி 5, சுயேட்சை 12 இடங்களில் வென்றுள்ளன. 

இதன் மூலம் என்டிபிபி - பாஜக கூட்டணி நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

Story image

திரிபுரா

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பாஜக 55 இடங்களிலும் மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணிக் கட்சியான திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணியும் (ஐபிஎஃப்டி) போட்டியிட்டன.

இதில், பாஜக 32 இடங்களிலும், திப்ரா மோதா கட்சி 13 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம், திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.  

Story image

மேகாலயா

மேகாலயாவில் 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலைமுதல் எண்ணப்பட்டன. இதில், தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.    

முடிவுகளின்படி தேசிய மக்கள் கட்சி முன்னணியில் உள்ளது. ஆனால் 
ஆட்சி அமைக்க 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதனால் அக்கட்சி ஆட்சி அமைக்க பாஜகவின்  ஆதரவு கோரியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.