புதிதாக பரவும் வைரஸ் காய்ச்சலால் உயிருக்கு ஆபத்தா? 

நாடு முழுவதும்  ‘எச்.3என்-2’ வைரஸ் காய்ச்சல் பரவி வேகமாக பரவுகிறது. இந்தக் காய்ச்சலால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
புதிதாக பரவும் வைரஸ் காய்ச்சலால் உயிருக்கு ஆபத்தா? 
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும்  ‘எச்.3என்-2’ வைரஸ் காய்ச்சல் பரவி வேகமாக பரவுகிறது. இந்தக் காய்ச்சலால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும்  ‘எச்.3என்-2’ வைரஸ் காய்ச்சல் பரவி வேகமாக பரவுகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் சளி, இருமலுடன் வேகமாக  வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக நாடு முழுவதும் வேகமாக பரவி  பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு 'எச்.3என்-2' என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காய்ச்சல் வந்தால் தொடர் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை. சாதாரண பாரசிட்டமால் மாத்திரையே இதற்கு போதுமானது என்றும் அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் இதை தடுக்கலாம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com