பெகாசஸ் உளவு செயலி ராகுல் காந்தியின் தொலைபேசியில் இல்லை அவரது மனதில் தான் இருக்கிறது என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியுள்ளார்.
லண்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப் படுவதாகவும் பேசினார். இது தொடர்பாக உளவுத் துறை தன்னை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பெகாசஸ் உளவு செயலி ராகுல் காந்தியின் தொலைபேசியில் இல்லை அவரது மனதில் தான் இருக்கிறது என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பேசியதாவது: பெகாசஸ் உளவு செயலி ராகுலின் தொலைபேசியில் இல்லை, அது அவரது மனதில் தான் இருக்கிறது. பெகாசஸ் காங்கிரஸின் டிஎன்ஏவில் நுழைந்துள்ளது. நான் ராகுல் காந்தியின் அறிவுத் திறனைக் கண்டு பரிதாபப்படுகிறேன். அவர் வெளிநாடுகளுக்கு சென்று நமது இந்தியாவுக்கு எதிராக பேசி வருகிறார். வெளிநாடுகளில் இந்தியாவினை அவமதிக்கும் விதமாக காங்கிரஸ் நடந்து கொள்வது அவர்களின் புதிய திட்டம். இந்தியா குறித்து வெளிநாடுகளுக்கு சென்று விமர்சிப்பது தேசத்துக்கு எதிரானது. அதனால், இந்தியாவும், இந்திய மக்களும் ராகுல் காந்தியை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14 நாடுகள் உடன் கைகோக்கும் சௌதி! உருவானது செங்கடல் பாதுகாப்பு கூட்டணி!

கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 15 - நேரலை!

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய ஆதி கும்பேஸ்வரர் யானை!

பள்ளி, கல்லூரி சம்பவங்கள்: அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு! உதயநிதி
விடியோக்கள்

சுதந்திர நாள் விழா! முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்! | CM Vijay | TVK



