மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர்!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது. 
மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர்!
Published on
Updated on
1 min read

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது. 

முன்னதாக நீதிமன்றம் அனுமதித்த ஏழு நாள் காவல் விசாரணை முடிந்த நிலையில் சிசோடியா சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்பு இன்று  ஆஜர்படுத்தப்பட்டார்.

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. 

இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாள் (மார்ச் 4 வரை) சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பின்னர், மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் 3 நாள்கள் காவலை நீட்டிக்க சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 நாள்கள் காவலை நீட்டித்தது. 

இந்நிலையில், சிசோடியா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com