தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா, மேகாலய முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று(செவ்வாய்க்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற மேகாலய சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) வெற்றி பெற்றது. தோ்தலுக்குப் பின்னா் என்பிபிக்கு பாஜக, ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், மாநிலத்தில் அக்கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைகிறது.
மேகாலய முதல்வராக கான்ராட் சங்மா இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். தலைநகர் ஷில்லாங்கில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
கான்ராட் சங்மாவைத் தொடர்ந்து பிரஸ்டன் தயான்சோங்(Prestone Tynsong) மற்றும் ஸ்னியாவ்பலாங் தார்(Sniawbhalang Dhar) ஆகிய இருவரும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, என்பிபி, பாஜக, யுடிபி உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அமைச்சா்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
முன்னதாக, மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை கூட்டப்பட்டது. தோ்தலில் வெற்றி பெற்ற 58 போ் எம்எல்ஏக்களாக பதவியேற்றனா். அவா்களுக்கு இடைக்கால சட்டப்பேரவைத் தலைவா் டிமோதி டி.ஷிரா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.
மேகாலயத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில், யுடிபி வேட்பாளரும் மாநில முன்னாள் அமைச்சருமான லிங்டோ காலமானதால் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!
ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!

பெண்களிடம் வினோத மோசடி! மொட்டை அடித்தால் ரூ. 45 ஆயிரம் பணம்!

24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


