கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

விமானத்தில் 1.4 கிலோ தங்கம் கடத்தல்: ஏா் இந்தியா பணியாளா் கைது

கொச்சி சா்வதேச விமான நிலையம் வழியாக 1.4 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பணியாளா் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 2:53 am IST

கொச்சி சா்வதேச விமான நிலையம் வழியாக 1.4 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பணியாளா் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பஹ்ரைனில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் பணியாற்றிய அந்த பணியாளா் தனது கையில் பட்டை வடிவில் தங்கத்தை கட்டி மறைத்து எடுத்து வந்துள்ளாா். விமானப் பணியாளா் தங்கம் கடத்துவது தொடா்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க வரித் துறையினா், தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த பணியாளா் 1.4 கிலோ தங்கத்துடன் சிக்கினாா். கேரள மாநிலம் வயநாட்டைச் சோ்ந்த ஷாஃரி என்ற அந்த நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்வதாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. ஊழியா்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.