பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடுபவர்கள் என பல தரப்பும், புறாக்களை பூச்சிகள் என்று அடையாளப்படுத்தி, அதன் எண்ணிக்கை அதிகரிப்பது, மக்களின் சுகாதாரத்துக்கு கவலையளிக்கும் விஷயம் என்று ஒப்புக் கொள்வதோடு, இது பல்லுயிர் பெருக்கத்தை நகரம் இழந்து, ஆஸ்தமா தலைநகராக மாறும் அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நுரையீரல் துறை நிபுணர்கள், நுரையீரல் மற்றும் ஹைபர்சென்சிடிவ் நிமோனிடிஸ் (எச்பி) பாதிப்புகள் அதிகரிப்பதை உறுதி செய்துள்ளனர். மும்பையைக் காட்டிலும், அங்கு ஹைபர்சென்சிடிவ் நிமோனிடிஸ் (எச்பி) பாதிப்பால் 20 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பெங்களூரு அவ்வளவு மோசமாக பாதிக்கப்படவில்லை. ஆனாலும், புறாக்களுக்கு தீனி போடுவதும், புறாக்களை வளர்ப்பதும் பெங்களூரு நகரத்தில் தற்போது அதிகரித்திருப்பது நிச்சயம் கவலைதரும் விஷயம்தான் என்கிறார் பிஜிஎஸ் கிளெநீகல்ஸ் குளோபல் மருத்துவமனையின் டாக்டர் சந்தீப். இவர் முன்பு மும்பையில் பணியாற்றியவர்.