பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நீதிமன்றங்களை மேம்படுத்த காத்திருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

நீதிமன்றங்களை மேம்படுத்த மற்றொரு நோய்த்தொற்று பரவும் வரை காத்திருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 10:03 pm

DIN

நீதிமன்றங்களை மேம்படுத்த மற்றொரு நோய்த்தொற்று பரவும் வரை காத்திருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளில் உள்ள உச்ச நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் 18-ஆவது கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கிய பின்னா், இந்தியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் 1.65 கோடி வழக்குகளை காணொலி வழியாக விசாரித்தன. இதேபோல உயா் நீதிமன்றங்கள் 75.8 லட்சம் வழக்குகளையும், உச்ச நீதிமன்றம் 3.79 லட்சம் வழக்குகளையும் காணொலி வழியாக விசாரித்தன.

நீதி வழங்குவதற்கு நவீன வழிமுறைகளை நீதித் துறை கையாள்வதற்கு கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டாயப்படுத்தியது. கொள்கை அடிப்படையில், நீதிமன்றங்களை மேம்படுத்துவதே அனைவரின் இலக்காக இருக்க வேண்டும். அதைச் செய்வதற்கான முடிவுகளை எடுப்பதற்கு மற்றொரு நோய்த்தொற்று பரவும் வரை காத்திருக்கக் கூடாது.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் காணொலி வழியாக பங்கேற்ாக உச்சநீதிமன்றத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.