
ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை(இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறந்த மூலப்பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணப்படப் பிரிவில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும் விருதை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரண்டு படக்குழுவினர்களுக்கும் பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஆஸ்கர் வென்ற தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் இந்திய ஆவணப்படம்
ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை வாழ்த்தி மோடி வெளியிட்ட பதிவில், “எதிர்பார்த்ததுதான். நாட்டு நாட்டு பாடலில் புகழ் உலகளாவியது. பல ஆண்டுகள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். இசையமைப்பாளர் கீரவாணி, சந்திரபோஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாரட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது!
அதேபோல், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவை பாராட்டி, ”கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங் மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் படம் நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை அற்புதமாக எடுத்துரைக்கிறது.” என்று டிவிட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.