பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குறித்து அச்சம் தேவையில்லை: குஜராத் சுகாதார அமைச்சர்

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :17 மார்ச் 2023, 10:01 pm IST

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சமீப காலமாக, மாநிலத்தில் இன்ஃப்ளூயன்ஸா பரவல்கள் காணப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசாங்க வழிகாட்டுதல்களின்படி இதனை  எளிதில் குணப்படுத்த முடியும். எங்களிடம் 2.75 லட்சம் மருந்துகள் உள்ளன. 

வைரஸுக்கு சிகிச்சையளிக்க மாநிலம் முழுவதும் அதை இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளோம். காய்ச்சலுக்கு 100 சதவீத சிகிச்சை உள்ளது, வைரஸைப் பற்றி பயப்படத் தேவையில்லை, ஆனால் மார்ச் இறுதி வரை பரவுவதைத் தடுக்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் மாநிலத்தில் கரோனா பரவல்களும் படிப்படியாக அதிகரிப்பதைக் காணலாம். நேற்று, 119 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளன. எனவே நாங்கள் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம், மேலும் தினசரி 8,000 முதல் 10,000 வரை கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.