பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மார்ச் மாதத்தில் 47 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கம்

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 47 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :2 மே 2023, 4:31 am

DIN


புது தில்லி: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 47 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி மாதத்தில் இந்தியாவைச் சேர்ந்த 46 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அதைவிட அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 


+91 என்று தொடங்கும் செல்லிடப்பேசி எண்களில்,  குறைதீர்ப்புப் பிரிவு வாயிலாக பயனாளிகளிடமிருந்து கிடைத்தப் புகார்கள், விதிமீறல்களைக் கண்டறியவும், தடுக்கவும், அந்தப் பிரிவு சுயமாக மேற்கொண்டு வரும் வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு மார்ச் 1 - 31-ஆம் தேதி வரை 47,15,906 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.  இதில், 16,59,385 கணக்குகள், பயனாளர்களிடமிருந்து எந்த புகாரும் வராத நிலையில், சுயமாக மேற்கொண்டு வரும் வழிமுறைகளின்படி முடக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர உயர்தர தொழில்நுட்பம், தரவு அறிவியலாளர்கள், நிபுணர்கள் உதவியுடன் வாட்ஸ்-ஆப் தளத்தில் பயனாளிகளின் பாதுகாப்பைக் கருதி இந்த தொடர் நடவடிக்கையை வாட்ஸ்-ஆப் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.