உத்தரகாண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில்  3.5 ஆகப் பதிவு

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. 
உத்தரகாண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில்  3.5 ஆகப் பதிவு
Updated on
1 min read


உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. 

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்க பதிவில், உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் வியாழக்கிழமை அதிகாலை 5.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கி.மி அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம், பித்தோராகருக்கு வட-வடமேற்கில் 23 கிமீ தொலைவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com