ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

உ.பி. ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் கெர்சகேரா தொழில்துறை பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

News image

fire_0905chn_84_2

Updated On :13 மே 2023, 11:52 am IST

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் கெர்சகேரா தொழில்துறை பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை உ.பி.யின் பலியின் ஜெர்ஹ் கிராமத்தில் தில்லி-லக்னௌ தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள அசோகா ஃபோம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்தனர், 6 பேர் காயம் அடைந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது கட்டடத்திற்குள் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உ.பி போலீசார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.