கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்தார்.
கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 117, பாஜக-73, மஜத -29, பிற கட்சிகள்- 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன.
இந்நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் பிரியங்கா காந்தி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
இதையும் படிக்க | கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸ் 114 தொகுதிகளில் முன்னிலை!