198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் அரசு!

கடல்சார் சர்வதேச எல்லையைத் தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்றிரவு விடுவித்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கடல்சார் சர்வதேச எல்லையைத் தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்றிரவு விடுவித்தது. 

அரபிக்கடலில் கடல்சார் சர்வதேச எல்லையைக் கடக்கும் மீனவர்கள் மீது அந்தந்த நாடுகளின் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 

கடலில் எல்லை தெரியாமல் மீன் பிடிக்கும்போது எல்லைத் தாண்டியதாக பாகிஸ்தான் அரசு 198 மீனவர்களை கைது செய்தது. 

இந்நிலையில், பிடிபட்ட 198 இந்திய மீனவர்கள் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை இரவு விடுவித்தது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத்தரக் கோரி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com