பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தில்லி - சிட்னி சென்ற விமானம் குலுங்கியதில் பயணிகள் காயம்!

தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயமடைந்துள்ளனர்.

News image
Updated On :17 மே 2023, 8:34 am

DIN

தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயமடைந்துள்ளனர்.

தில்லியிலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ-302 விமானம் செவ்வாய்க்கிழமை சிட்னி புறப்பட்டுச் சென்றது. திடீரென நடுவானில் ஏற்பட்ட ‘டர்புளன்ஸ்’ பிரச்னையால் 7 பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.

உடனடியாக விமானத்தில் பயணித்த மருத்துவர்களின் உதவியுடன் காயமடைந்தவர்களுக்கு விமான பணியாளர்கள் முதலுதவி அளித்துள்ளனர்.

தொடர்ந்து, சிட்னி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் 3 பேருக்கு மட்டுமே சிகிச்சை தேவைப்பட்டது. அவர்களுக்கு விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பயணிகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.