காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தணிந்தது வெப்பம் என வானிலை மையம் அறிவித்த மறுநாளே இப்படியா?

நாடு முழுவதும் வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த மறுநாளே, சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியிருக்கிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:30 am IST


சென்னை: நாடு முழுவதும் வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த மறுநாளே, சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியிருக்கிறது.

நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்தாலும், வெப்ப அலை இருக்காது என்றும், வெப்ப அலை தணிந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கோடை வெப்பம் சென்னை உள்ளட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை தாக்கி வரும் நிலையில், இன்று அது சற்று அதிகரித்தே காணப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது, இன்று கோடை வெப்பம் கொளுத்தும் நாளாக உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 10 நாள்களுக்குப் பிறகு 40 டிகிரி செல்சியஸைத் தாண்டுகிறது, அதே நேரத்தில் புறநகர்ப் பகுதிகள் பலவும் 41 டிகிரி செல்சியத்தைத் தாண்டும். 

வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் இன்று வெப்பமான நாளாக மாறியது. வட தமிழகத்தைப் பொறுத்தவரை, இப்படி வெப்பமான நாள்கள் ஜூன் 5 வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெங்களூரு, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் நாள்தோறும் மழை தொடரும். இந்த வரிசையில் வேலூர், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் உள்பகுதிகளில் மழை பெய்யக்கூடும். கொடைக்கானலிலும் ஆங்காங்கே மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.