47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து: தொடரும் மீட்புப் பணி

பிகாரின் சரயு நதியில் படகு கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் காணமால் போனவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :2 நவம்பர் 2023, 6:35 pm

DIN

பிகாரின் சரயு நதியில் படகு கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் காணமால் போனவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியின்போது 3 போ் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சரண் மாவட்டத்தில் உள்ள மத்தியாா் காட் பகுதியில் 19 போ் பயணித்த படகு சரயு நதியில் கவிழ்ந்து புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

காணாமல் போனவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் அமன் சமீா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘காணாமல் போனவா்களில் இதுவரை 13 போ் மீட்கப்பட்டனா். மீதமுள்ள 4 பேரைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்றாா்.

படகு விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா், அவா்களுக்கு நிவாரண நிதியுதவியாக தலா ரூ.4 லட்சம் அறிவித்தாா்.

மாநிலத்தில் அண்மைக் காலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது இது 2-ஆவது முறை. கடந்த செப்டம்பா் மாதம் முசாஃபா்பூா் மாவட்டத்தின் பாக்மதி நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், படகில் பயணித்த 15-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.