மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய நில அதிர்வு மையத்தின் வலைத்தளத்தில், மதியம் 12.55 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்று கூடுதல் ஆட்சியர் சி.எல்.சானாப் தெரிவித்துள்ளார்.