தீபாவளியை முன்னிட்டு தில்லி அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், புத்தாடை, பட்டாசு, சொந்த ஊருக்கு பயணம் என தீபாவளிக்கான ஏற்பாடுகள் மக்களிடையே விருவிருப்பை கூட்டியுள்ளது.
இந்த நிலையில், தீபாவளி என்றாலே அரசு நிறுவன ஊழியர்கள் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை போனஸ் எதிர்ப்பார்ப்பது வழக்கம்.
அதன்படி, தில்லியில் அரசிதழ் பதிவுபெறாத சுமார் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க கேஜரிவால் அரசு முடிவு செய்துள்ளது.
குரூப் பி மற்றும் குரூப் சி போன்ற அரசிதழ் பதிவு பெறாத 80 ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தில்லி அரசு சுமார் ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது எனச் செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக்க தில்லி அரசு எப்போதும் முயற்சி செய்து வருவதாகவும், இதுபோன்ற முயற்சிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் முதல்வர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா தொடக்கப்புள்ளி மட்டுமே! காந்தி நினைவிடத்தில் சோனம் வாங்சுக் பேச்சு

வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை பார்ப்பது எத்தனை பேர்? அறிவது எப்படி? பயன்கள் என்னென்ன?

விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் புதிய தடம்!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay


