வாக்கு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து அய்ஸ்வால் தொகுதியில் மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா வாக்களித்தார்.
மிஸோரமின் 40 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
கிறிஸ்தவா்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த மாநிலத்தில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி, எதிா்க்கட்சிகளான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக என பலமுனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா இன்று காலையே அய்ஸ்வால் வடக்கு - II தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்கச் சென்றார். ஆனால், அங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் வாக்களிக்க முடியாமல் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டதையடுத்து முதல்வர் ஜோரம்தங்கா வாக்களித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மிஸோரத்தில் மீண்டும் எங்கள் ஆட்சி அமையும். மேலும் என்னுடைய தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளுடன் நான் வெற்றி பெறுவேன்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


