உடுப்பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்திக் கொலை

கர்நாடக மாநிலம், உடுப்பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
உடுப்பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்திக் கொலை
Published on
Updated on
1 min read

மங்களூரு: கர்நாடக மாநிலம், உடுப்பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உடுப்பி மாவட்டத்தில் உள்ள கெம்மன்னு என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஹசீனா (48) அவரது பிள்ளைகள் அஃப்சன் (23), அசீம் (14), மற்றும் அய்னாஸ் (20). படுகாயமடைந்த ஹசீனாவின் மாமியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிக்க | மனிதம் எங்கே போனது?

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கே.அருண் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை காலை ஹசீனா அவரது பிள்ளைகள் மற்றும் மாமியார் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த  மர்ம கும்பல், அவர்களை தாக்கி, கத்தியால் குத்தியது. சம்பவத்திறப் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில்  ஹசீனா அவரது பிள்ளைகள் 3 என பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் உயிருக்கு போராட்டிய ஹசீனாவின் மாமியார் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மர்ம கும்பல் வீட்டில் இருந்து எந்தவிதமான பொருட்களை திருடிச் செல்லவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. 

ஹசீனாவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com