உலக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். உலக சாம்பியனாவதற்கு என்ன தேவையோ அது உங்களிடம் உள்ளது. நாட்டிற்கு நீங்கள் தொடர்ந்து பெருமை சேர்க்கிறீர்கள்.
இறுதிப்போட்டிக்கான உங்கள் பயணம் மிகவும் உத்வேகமளிக்கிறது. ஒற்றுமை, கடின உழைப்பு, உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என மதிப்புமிக்க பல பாடங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.