எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘2+2’ அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள ‘2+2 அமைச்சா்கள்’ கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் இந்தியா வந்தடைந்தார்.

News image
Updated On :20 நவம்பர் 2023, 5:25 am

DIN

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள ‘2+2 அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை’ கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் திங்கள்கிழமை காலை இந்தியா வந்தடைந்தார்.

புதுதில்லி விமான நிலையம் வந்தடைந்த அவரை இந்திய வெளியுறவுத் துறையினர் வரவேற்றனர். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்தியாவின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

பென்னி வாங் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2வது 2+2 அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 14வது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்ள உள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வந்தார். அவரை குஜராத் முதல்வர் வரவேற்று உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார்.

இன்று நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் இவர்களுடன் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.