ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் இரு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மறைந்துள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவ வீரர்கள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.