ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘கிழக்கிந்தியாவின் தொழில் மண்டலமாக ஒடிசா திகழும்’ : அமைச்சர்

848 தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது ஒடிசா அரசு.

News image
பிரதாப் கேசரி தேப்
Updated On :24 நவம்பர் 2023, 10:23 am

DIN

24.73 லட்சம் மதிப்புள்ள 848 தொழில் திட்டங்களுக்கு ஒடிசா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில அமைச்சர் பிரதாப் கேசரி தேப் தெரிவித்துள்ளார்.

சட்ட பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், மாநில அரசு வெவ்வேறு துறையைச் சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் கிழக்கிந்தியாவில் ஒடிசாவை முக்கிய தொழில் மண்டலமாக மாற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றை சாளர முறையில் இந்த தொழில் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவுள்ளதாகவும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயம் மற்றும் உணவு பொருள்கள் உற்பத்தி, உலோகங்கள், மென்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், வேதிபொருள்கள் மற்றும் ஆடை சார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவிருப்பதாகவும் மற்ற அரசு துறைகளுடன் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள செய்ய ஒடிசா தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகம் முகமையாக செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.