மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு விசாரணை நவ.28ல் ஒத்திவைப்பு!

தில்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மீதான விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது. 

News image

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்.

Updated On :25 நவம்பர் 2023, 11:55 am

தில்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மீதான விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது. 

தில்லி கலால் ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவா் சஞ்சய் சிங், ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். 

இந்த ஜாமீன் கோரும் மனு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் பதிவுத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இதற்கிடையில், சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 4 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.